News May 16, 2024
நாட்டுப்படகு மீனவர்கள் செல்ல தடை

நாளை (மே 17) முதல் கடலில் காற்று வேகம் மணிக்கு 40 முதல் 45 கிமீ, அதிகபட்சம் 55 கிமீ வரை வீசக்கூடும். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம். படகு வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
செப்டம்பர் 15 – முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மாவட்ட முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைத்து பேரூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரையும் அண்ணா திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
News September 13, 2025
ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

ராமேஸ்வரத்தில் ஆடி புரட்டாசி மற்றும் தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்த வருகின்றனர். எனவே, செப்டம்பர் 21ஆம் தேதி மகாளய அமாவாசை கொண்டாடப்பட இருப்பதால் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 13, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (செப்.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.