News May 16, 2024
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
கடத்தல் தங்கம்: மத்திய அரசு வெளியிட்ட ஷாக் கணக்கு

2023-24-ல் 6,599 கடத்தல் வழக்குகளில் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பார்லிமென்ட்டில் கூறியுள்ளார். இது, 2022 – 23-ல் 4,343 கிலோ, 2021 – 2022 நிதியாண்டில் 2,172 கிலோவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்தத் தகவல் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சட்டவிரோதமான கடத்தல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இதனை தடுக்க என்ன வழி?
News August 20, 2025
அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

இண்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-5’ சோதனை வெற்றி அடைந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனைக் களத்தில் இச்சோதனை நடந்தது. செயல்பாட்டு, தொழில்நுட்ப ரீதியாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இச்சோதனை இருந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் கூட்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News August 20, 2025
புதிய சட்ட மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவிநீக்கம் செய்யும் ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தீவிரமாகியுள்ளது. இந்த சட்டம் குற்றம் செய்வதிலிருந்து அரசியல்வாதிகளை தடுக்க உதவும் என்கின்றனர் ஆதரிப்போர். ஆனால், குற்றம் செய்யாமல் (அ) பொய்வழக்கில் சிறைசெல்ல நேரும் அரசியல் தலைவர்களை, பதவியிழக்க செய்ய இது தவறாக பயன்படுத்தப்படும் என்கின்றனர் எதிர்ப்போர். உங்களின் கருத்து என்ன?