News May 16, 2024
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
‘யுத்த நாயகன்’ காலமானார்

நாட்டுக்காக 3 போர்களில் பங்கேற்று ‘War Hero’என புகழ்பெற்ற கரோடி திம்மப்பா ஆல்வா(85) காலமானார். மங்களூருவில் பிறந்த இவர், 1971 போரின்போது, தாக்குதலுக்கு ஆளாகி சிட்டகாங் வனப்பகுதியில் உயிருக்கு போராடி மீண்டு வந்தார். தனது போர் அனுபவங்களை ‘Garodi Maneyinda Sena Garadige’ புத்தகமாக எழுதியுள்ளார். மக்கள் சேவையில் ஆர்வம் கொண்ட அவர் தனது உடலையும், KS ஹெக்டே மருத்துவ அகாடமிக்கு தானம் செய்துள்ளார். #RIP
News October 18, 2025
ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24-ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 21-ம் தேதியே உருவாகிறது என IMD தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தென் கிழக்கு அரபிக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால் வங்கக்கடல், அரபிக்கடலில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியை சந்திக்கும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
தீபாவளியும் புது டிரெஸ்ஸும்..

இப்போ போரடிச்சா ஷாப்பிங் போய், துணி வாங்குறோம். ஆனா, ஒரு காலத்துல தீபாவளி, பொங்கல் வந்தா மட்டும்தான் புது துணி. அதுக்காக வருஷமெல்லாம் வெயிட்டிங்கில் இருப்போம். வளருற பசங்களா இருந்தா அந்த துணியும் கொஞ்சம் லூசா தான் கிடைக்கும். தீபாவளிக்கு 2 நாள் முன்ன வீட்டுக்கு டிரெஸ் வந்தாலும், அத போட்டு பாக்க முடியாது. தொட்டு பாத்துட்டே உக்கார்ந்துட்டு இருக்கணும். உங்க வாழ்க்கை’ல மறக்க முடியாத தீபாவளி எது, ஏன்?