News May 16, 2024
கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க வேப்பிலை, சீரகம், மிளகு, கற்பூரவள்ளி ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக தயார் செய்யவும். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 27, 2025
TN அரசு அதிகாரிகளை சந்தேகிக்கிறதா திமுக?: BJP

SIR தொடர்பாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடும் TN அரசு அதிகாரிகளை, திமுக அரசு சந்தேகிக்கிறதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். RK நகர் இடைத்தேர்தலின் போது போலி வாக்காளர் குறித்து திமுக வழக்கு தொடர்ந்தது மறந்து விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தவறுகளை மறைக்கவே, திமுக SIR-ஐ கையில் எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News October 27, 2025
BREAKING: ரஜினி வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் வந்த நிலையில், அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். எனினும் ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்று போலீசார் அங்கு சோதனை நடத்தவில்லை. 2 வாரங்களுக்கு முன்பாக, இதே போல அவரது வீட்டிற்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
News October 27, 2025
இந்தியாவை மீண்டும் மீண்டும் சீண்டும் வங்கதேச தலைவர்

வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனஸ் மீண்டும் ஒருமுறை இந்தியாவை வம்பிழுத்துள்ளார். பாக்., தளபதிக்கு அவர் பரிசளித்த மேப்பில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தின் மாநிலங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செக் வைக்க, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார்.


