News May 16, 2024
ஈரோடு புத்தகத் திருவிழா தேதி அறிவிப்பு

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும், ஈரோடு புத்தகத் திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை 12 நாட்களுக்கு ஈரோடு மாநகரில் நடைபெறவுள்ளது. மேலும் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா – புத்தகத் திருவிழாவின் 20ஆம் ஆண்டு ஆகிய காரணங்களினால் இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது.
Similar News
News October 17, 2025
ஈரோடு மாவட்டத்தில் மின் தடையா? உடனே CALL

ஈரோடு,மாவட்டத்தில் பருவமழை துவங்குவதால், மின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வேண்டுகோள்விடுத்துள்ளார். மின் கம்பி அறுந்தால் அல்லது மின்தடை, மின் கட்டணத்தில் ஏற்படும் குழப்பங்கள் அல்லது மின் சம்பந்தமாக வேறு ஏதேனும் உதவி தேவைபட்டால் தொடர்புக்கு – 94987 94987 அல்லது வாட்ஸ் ஆப் எண் -94458 51912 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.SHERE பண்ணுங்க
News October 17, 2025
கோபி அருகே விஷம் குடித்து தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (34). டிரைவராக வேலை பார்த்து வந்த இவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் பாக்யராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.இந்தநிலையில் பாக்யராஜ், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை!
News October 17, 2025
பெருந்துறை அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்!

பெருந்துறை புங்கம்பாடியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக பெருந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வாய்க்காலில் மிதந்த சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? தற்கொலை செய்தாரா? என்று விசாரிக்கின்றனர்.