News May 16, 2024
திமுக நிர்வாகி மீது ராதிகா சரத்குமார் புகார்

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே ஆளுநர் ரவி மற்றும் குஷ்பூ குறித்து அவதூறாக பேசியதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராதிகா குறித்து அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், இன்று ராதிகா புகார் அளித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
பழைய பென்ஷன் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க ₹1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 16, 2025
உதவி பேராசிரியர் தேர்வு.. நாளை முதல் Apply பண்ணுங்க

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பாடவாரியான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நவ.10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
News October 16, 2025
இனி Lip Balm வேண்டாம்; இத யூஸ் பண்ணுங்க

குளிர்காலத்தில் உதடுகள் வரண்டு போவதால் வெடிப்புகள் ஏற்படும். இது உங்கள் முக அழகை கெடுக்கிறது. இதற்காக சிலர் லிப் பாம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை தற்காலிக தீர்வாகவே இருக்கிறது. உங்கள் உதடுகள் மென்மையாக மாற லிப் பாமுக்கு பதில் பாதாம் எண்ணெய் லேசாக தடவிப் பாருங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியமாகிறது. SHARE.