News May 16, 2024
இந்து-முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்கிறார் மோடி

ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து சகோதரி பிரியங்கா ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட பொதுமக்களை மோடி நேரில் சந்திக்கவில்லை. ஆனால், தனது பாட்டி இந்திரா காந்தி நடைபயணமாக வந்து மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்று கூறினார். இந்து-முஸ்லிம்களை வைத்து மோடி அரசியல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News October 30, 2025
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

உலக சந்தையில் கடந்த 17-ம் தேதி புதிய உச்சமாக $4,379-க்கு விற்பனையான 1 அவுன்ஸ் தங்கம் இன்று $3,949 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் தாக்கத்தால் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்று (அக்.29) இதன் விலை ₹2000 உயர்ந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால், நம்மூரிலும் இன்று விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 30, 2025
விவசாயம் தெரியாதவர் விஜய்: MRK பன்னீர்செல்வம்

நெல் கொள்முதல் தொடர்பாக திமுகவை விஜய் விமர்சித்திருந்தார். இந்நிலையில், விவசாயம் பற்றி தெரியாமல் புதுப்புது தலைவர்கள் எல்லாம் அறிக்கை விடுவதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் விஜய் எங்கு சென்றார் என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் கஷ்ட காலத்தில் களத்தில் நிற்பவரே சிறந்த தலைவர் எனவும் தெரிவித்தார். மக்களின் முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாகவும் கூறினார்.
News October 30, 2025
மக்கள்தொகை கணக்கெடுப்பு: நவம்பரில் முன்சோதனை

2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக டிஜிட்டல் முறையில் முன்-சோதனை எடுக்கப்படவுள்ளது. வீட்டு பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 – 30 வரையிலும், நவ.1 – 7 வரையும் சுய கணக்கெடுப்பு செய்வதற்கான சோதனையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), ஆர்.கே.பெட் (திருவள்ளூர்), மாங்காடு (காஞ்சி) ஆகிய 3 இடங்களில் முன்-சோதனை நடத்தப்படவுள்ளது.


