News May 16, 2024

டிஷ்யூ பேப்பரால் விமானத்தில் பதற்றம்

image

டெல்லியில் இருந்து குஜராத்தின் வதோதராவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்கிருந்த டிஷ்யூ பேப்பரில் ‘Bomb’ என எழுதி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளிடம் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் வேறொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

Similar News

News September 12, 2025

ஆசிய கோப்பை: இன்று பாக். Vs ஓமன்

image

ஆசிய கோப்பை தொடரில் இன்று குரூப் ஏ-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதுகின்றன. அணியில் பாபர், ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் இல்லையென்றாலும் ஓமனை வீழ்த்தும் திறன் பாகிஸ்தானிடம் உள்ளது. எனவே, இந்த போட்டி One sided-ஆக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவை எதிர்கொள்ளும் முன்பாக இந்த மோதலை பயிற்சி ஆட்டமாக பாக். கருதும். அபு தாபியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

News September 12, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 12, 2025

நக்சலைட்கள் அனைவரும் சரணடைய வேண்டும்: அமித்ஷா

image

சத்தீஸ்கரில் 10 நக்சலைட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதுபற்றி X-ல் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, CRPF, கோப்ரா கமாண்டோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கூட்டாக நடத்திய ஆபரேஷனில் தலைக்கு ₹1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சலைட் மனோஜ் உள்பட 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். விதித்த கெடுவுக்குள் அனைவரும் சரண்டர் ஆகணும். சிவப்பு பயங்கரவாதத்துக்கு மார்ச் 31 தான் கெடு என்று X-ல் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!