News March 21, 2026
CM ஸ்டாலின் செயலிழந்து விட்டார்: எல்.முருகன்

TN-ல் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக எல்.முருகன் கூறியுள்ளார். போலீஸை கட்டுப்பாட்டில் வைத்துள்ள CM ஸ்டாலின் செயலிழந்துவிட்டதாகவும், தனக்கு கீழ் இயங்கும் துறையில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். 5 வருட திமுக ஆட்சியில் கஞ்சா புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதால் சொல்லி மாளாத துயரத்தை மக்கள் அனுபவிப்பதாகவும் கூறினார்.
Similar News
News April 8, 2026
மழை வெளுக்கப் போகுது.. வந்தது அலர்ட்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 14-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த 2 நாள்கள் மழை பெய்யக்கூடுமாம். உஷார் மக்களே!
News April 8, 2026
BREAKING: தலைமைச் செயலாளர் மாற்றம்

தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமைச் செயலாளராக சாய்குமாரும், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக சந்தீப் மிட்டலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார் கடந்த ஆட்சியில் EPS-ன் தனிச் செயலாளர்(1) ஆக இருந்தவர் ஆவார்.
News April 8, 2026
தீயசக்தி ஆட்சி வேண்டுமா? சசிகலா

மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுக நினைப்பதாக சசிகலா கூறியுள்ளார். திமுக ஆட்சியில் விலைவாசி, வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்ந்துவிட்டதாக சாடிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் TN பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். TN-ல் தீயசக்தி ஆட்சி (அ) துரோக ஆட்சி (அ) தியாகத்தின் ஆட்சி வேண்டுமா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


