News May 16, 2024

பனைமரத்தின் மீது கார் மோதி விபத்து

image

பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை- மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதியது. இதில் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். அவரது நண்பர் கணேஷ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

Similar News

News October 15, 2025

தருமபுரி மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் அக்.15 அன்று இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ரோந்து அதிகாரியாக குணவரமன், டி.எஸ்.பி. (DCRB) நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி, ஹரூர், பென்னாகரம், பாலக்கோடு பிரிவுகளுக்கான காவல் நிலையங்களில் பொறுப்பேற்ற அதிகாரிகளின் பெயர், மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

News October 15, 2025

புதிய பேருந்து சேவை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

image

தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நான்கு வழித்தடங்களில் மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பேருந்து சேவை அக்.14 இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆட்சியர் ரெ.சதீஸ் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆ.மணி எம்பி, லட்சுமி நாட்டான் மாது, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News October 15, 2025

பூங்கா திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வைர விழா பூங்கா திறப்பு விழா இன்று அக்.14 நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூங்காவினை திறந்து வைத்து சிறப்பித்தார் இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி எம்பி மணி கலந்து கொண்டனர்.

error: Content is protected !!