News May 16, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

வட தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இன்று(மே 16) இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீன்பிடிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு புதுச்சேரி மாநில மீன்வளத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 4, 2025

புதுவை: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

image

கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி ஆணையர் ஸ்ரீகிருஷ்ண மோகன் உப்புவிற்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரத் துறை கவனிப்பார். அரசு செயலர் முகமது ஹசன் அபித், உயர்கல்வி துறையை கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.

News November 4, 2025

புதுவையில் இன்று மின் தடை அறிவிப்பு

image

புதுவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மரப்பாலம் துணை மின் நிலையம், கோர்க்காடு துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் இன்று (நவ.04) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 வரை தில்லையாடி, வித்யாலயா நகர், தியாகி சுப்புராயன் நகர், இந்திரா நகர் மற்றும் இன்னும் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

புதுவை: ஜிப்மர் மருத்துவமனை இயங்காது

image

புதுவை ஜிப்மர் நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் விடுமுறை தினமான குருநானக் ஜெயந்தி முன்னிட்டு, நாளை 5ம் தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே வெளிப்புற சிகிச்சைக்கு வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். மற்றபடி அவசர சிகிச்சை பிரிவு அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!