News May 16, 2024
மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், போதைப்பொருள் ஒழிப்பில் மாவட்ட வாரியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Similar News
News November 6, 2025
’பாஜக நிர்வாகிக்கு மூளை மழுங்கிப்போச்சு’

மும்பையில் இஸ்லாமியர்கள் மேயராக வரமுடியாது என பாஜக நிர்வாகி அமீத் சதாம் கூறியதற்கு உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த ஆனந்த் துபே பதிலடி கொடுத்துள்ளார். மும்பை பாஜக தலைவரானதில் இருந்து அமீத்துக்கு மூளை மழுங்கிப்போனதாக சாடிய அவர், பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்படி பேசுகிறார் என கூறினார். இதனையடுத்து பாஜக நிர்வாகியை சாடிய ஆனந்தே, மராத்தி இந்துதான் மும்பையில் மேயராக வருவார் எனவும் கூறியுள்ளார்.
News November 6, 2025
விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய்தான் CM வேட்பாளர் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நிச்சயம் தவெக தங்கள் கூட்டணிக்கு வரும் என அதிமுக நம்புகிறது. இந்நிலையில், தவெக உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாகவா பேச முடியும் என RB உதயகுமார் கேட்டுள்ளார். நடக்க வேண்டிய நேரத்தில், TN மக்களுக்கு நன்மை தரும் வகையில் அது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக + தவெக கூட்டணி உறுதியாகுமா?
News November 6, 2025
பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தினால் என்ன ஆகும்?

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. தாய் அருந்தும் மது ரத்தத்தின் வழியாக பாலில் கலக்குமாம். அந்த பாலை குழந்தைகள் அருந்தும்போது, அவர்கள் உடலிலும் மது கலக்கிறது. குழந்தைகளின் கல்லீரல் மிகவும் மென்மையானது என்பதால், மதுவை அவர்களது உடலால் சுத்திகரிக்க முடியாது. இதனால் குழந்தைகளில் மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE பண்ணுங்க.


