News May 16, 2024
திண்டுக்கல்: மழைநீரில் சிக்கிய கார்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கார் மழைநீரில் செல்லமுடியாமல் சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற மற்றவர்கள் காரை தள்ளிவிட்டு வெளியேற்றினர்.
Similar News
News October 19, 2025
திண்டுக்கல்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News October 19, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

திண்டுக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News October 19, 2025
திண்டுக்கல்லில் ‘கிடுகிடு’ உயர்வு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ₹ 500 முதல் ₹ 800 வரை விற்பனையான மல்லிகைப்பூவின் விலை,நேற்று கிலோ ₹ 1,800 முதல் ₹ 2,200 வரையிலும், முல்லை ₹ 1,300, காக்கரட்டான் ₹1,300, ஜாதிப்பூ ₹ 1,000 விற்பனை செய்யப்பட்டது. உங்கள் பகுதியில் என்ன விலை மக்களே கமெண்ட் பண்ணுங்க!