News May 16, 2024

யானைகள் கணக்கெடுப்பு எப்படி செய்யப்படுகிறது?

image

தமிழக வனப்பகுதிகளில் மே 23ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. முதல் நாளில் யானைகள் நேரடியாக எண்ணப்படும். இரண்டாம் நாள், யானைகளின் சானத்தைக் கொண்டு கணக்கிடப்படும். மூன்றாம் நாள், தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கணக்கிடப்படும். கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற கணக்கெடுப்பில், தமிழகத்தில் 2961 யானைகள் இருப்பது தெரியவந்தது.

Similar News

News August 8, 2025

பிரதமர் மோடியுடன் கனிமொழி சந்திப்பு

image

PM மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் MP கனிமொழி. இது தொடர்பாக தனது X பதிவில், பிரதமரை இன்று நேரில் சந்தித்து தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு மாற்று முனையம் அமைக்க உதவ வேண்டும் என தான் கோரிக்கை வைத்ததாகவும், மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த அளித்த ஆதரவுக்கும் தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 8, 2025

சச்சின் சாதனையை ரூட் தகர்ப்பார்: கிரிக்கெட் ரவுண்டப்

image

*அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார். அவரது உழைப்புக்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என கம்பீர் கூறியுள்ளதாக தகவல்.
* டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பதோடு 18,000 ரன்கள் குவிப்பார் என முன்னாள் இங்கி., வீரர் மண்டி பனேசர் கணிப்பு.
*ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார் டெவான் கான்வே.
*WI vs PAK முதல் ODI நாளை துவங்குகிறது.

News August 8, 2025

காந்தாரா பட நடிகர் மரணம்!

image

பிரபல நடிகர் பிரபாகர் கல்யாணி, வீட்டில் மயங்கி விழுந்து காலமானார். இவர் 2 நாள்களுக்கு முன் தான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காந்தாரா’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த பிரபாகர், மேடை நாடகங்களிலும் மக்களை பெருமளவில் கவர்ந்தார். முன்னதாக, காந்தாரா 1’ படத்தில் நடித்து வந்த 3 நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது.

error: Content is protected !!