News May 16, 2024
கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.
Similar News
News January 21, 2026
வேளாண் விதைப்பைகள் திருடிய உதவி அலுவலர் சஸ்பெண்ட்

வேப்பனப்பள்ளியில் உள்ள வட்டார வேளாண் மையத்தில் ஜன-15 அன்று அரசு விடுமுறை நாளில் உதவி அலுவலர் முருகன் என்பவர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த விதை பைகளை திருடிச் செல்ல முயன்றார். இதுகுறித்து உதவி இயக்குனர் சிவமணி அளித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசில் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து முருகன் இணை இயக்குனர் காளியப்பன் முருகனை ஜன-20 சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News January 21, 2026
கிருஷ்ணகிரியில் கோர விபத்து!

உத்தனப்பள்ளி அடுத்த தர்மபுரி ஓசூர் நெடுஞ்சாலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வனோஜ் கோவன் 37 என்பவர் ஜன-20 மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுபாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர
News January 21, 2026
கிருஷ்ணகிரி அருகே படுபயங்கர விபத்து

கேரளா மாநிலம் ஏருணாகுளத்தை சேர்ந்தவர் முரளி. இவர் நேற்று (ஜன.20) மாலை சிம்பல்திராடி கிராமத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


