News May 16, 2024
கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.
Similar News
News February 12, 2026
கிருஷ்ணகிரியில் துணிகரம்; போலீஸ் வலை வீச்சு!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்தியதேவி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி குருபரப்பள்ளி அருகே காரை நிறுத்தி விட்டு அருகே இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோத்தித்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.
News February 12, 2026
ஓசூரில் புதிய நிர்வாக அலுவலகம் ஆய்வு

ஓசூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக குழு அலுவலகங்களை முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் ஓசூரின் முதல் மேயர் எஸ்.ஏ. சத்யா ஆய்வு செய்தார். அலுவலக வசதிகளை பார்வையிட்டு, சிறந்த நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான சேவைகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த முயற்சி நிர்வாக செயல்திறனை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 12, 2026
கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற கொடூர கணவர்!

தளி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அவரது மனைவி ரூபாவை கழுத்தறுத்துக் கொலை செய்தார். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் விழைந்த இந்த கொடூர வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் நேற்று (பிப்.11) விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி சுதா, கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்த குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனையுடன், 3 ஆண்டு சிறை மற்றும் ₹6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


