News May 16, 2024
கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.
Similar News
News January 1, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
கிருஷ்ணகிரி: டிஎன்பிஎஸ்சி குரூப்-II இலவச பயிற்சி வகுப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-II & IIA தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று தொடங்குகின்றன. பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தப்படும் இதில் மாதிரித் தேர்வுகள், 3000+ நூல்கள் மற்றும் இலவச வைஃபை வசதிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இதில் பங்கேற்க இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம்.


