News May 16, 2024
3 உயிர்களைக் காப்பாற்றிய மகான்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கருணாகரன் (30) மே 11ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர், அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இருவேறு நபர்களுக்கு, கல்லீரல் ஒருவருக்கு என தானம் செய்யப்பட்டது. அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
Similar News
News January 14, 2026
ஹார்ட் அட்டாக்கை தடுக்க செலவில்லாத ஈஸி வழி

மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி, சரியான தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். *காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது *தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம் *பகல் தூக்கத்தை குறைப்பது (அ) தவிர்ப்பது *தூக்கமின்மை பிரச்னைகளை சரிசெய்வது… இவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தாலே, இதய நோய்கள் வரும் வாய்ப்பை 42% குறைக்கலாம் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News January 14, 2026
கவனம்.. இருமல் மருந்துக்கு தடை

ம.பி.,யில் Coldrif இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘அல்மாண்ட் கிட் சிரப்’ மருந்துக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. இதில் சிறுநீரகத்தை பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகமாக இருப்பது தெரிய வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பிஹாரில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. BE ALERT.
News January 14, 2026
சற்றுமுன்: ₹5,000 ஆக உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு

பொங்கல் பரிசாக பல்வேறு அறிவிப்புகளை <<18854282>>தமிழக அரசு<<>> அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றும் பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு (RCH) வழங்கப்பட்டு வரும் ₹1,500 மாத சம்பளம் ₹5,000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை ஜன.19-ல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


