News March 20, 2026
பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News April 4, 2026
பெரம்பலுர்: சிலிண்டர் புக் பண்றீங்களா..இது முக்கியம்!

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News April 4, 2026
பெரம்பலூர்: ஆட்சியர் பெயரில் மோசடி – எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்களின் பெயரில், புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலி அடையாளம் மற்றும் எண்களை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த எண்ணில் இருந்து பணம் கேட்டு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும், இதற்கு குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News April 4, 2026
பெரம்பலுர்: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை!

இந்திய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Local Bank Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1000 (தமிழ்நாடு-65)
3. வயது: 20 – 30
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


