News May 16, 2024
விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.
Similar News
News February 4, 2026
அப்துல்கலாம் பொன்மொழிகள்!

*ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர் *தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது *ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான் *தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
News February 4, 2026
கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை

மறைந்த லிபிய அதிபர் மும்மர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி (53) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜிந்தன் நகரில் உள்ள சைஃப் கடாஃபியின் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், அவரை சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஓத்மன் SM-ல் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அரசுப் பதவிகளில் இல்லையென்றாலும், லிபியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டார்.
News February 4, 2026
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா?

கடந்தமுறை அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோற்ற அண்ணாமலை இம்முறை தொகுதி மாறி திட்டமிட்டுள்ளாராம். கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் நல்ல வாக்குகளை பெற்றதால், சிங்காநல்லூர், பல்லடம் அல்லது சூலூரில் போட்டியிட ஆலோசிக்கிறாராம். அதிமுக வாக்குகளும் கைகொடுத்தால் MLA ஆகிவிடலாம் என அண்ணாமலை நம்புகிறாராம்.


