News March 20, 2026
சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News April 6, 2026
கொத்தனாராக மாறிய ஆதவ்.. வாக்கு சேகரிப்பில் தீவிரம்

சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சேகரிக்க ஒவ்வொரு வேட்பாளரும் புதுப்புது உத்திகளை கையாள்கின்றனர். அந்த வகையில், வில்லிவாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவும், வீடுகட்டும் சித்தாள்களுக்கு உதவுவது, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, துணிகளுக்கு இஸ்திரி போடுவது என களத்தில் வாக்கு சேகரித்தார். சில இடங்களில் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
News April 6, 2026
லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

2026-27 ஆம் நிதியாண்டிற்கான முதல் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் தொடங்கியுள்ளது. இதில், RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ரெப்போ ரேட் குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாளை மறுநாள் அவர் அறிவிக்க உள்ளார். இதில், கடந்த ஆண்டைப்போல் இந்தாண்டும் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால், வீடு, வாகன கடன் பெற்றவர்களுக்கு EMI குறையும்.
News April 6, 2026
கரூர் போல் சென்னையிலும்.. ஆதவ் பகீர் குற்றச்சாட்டு

<<19578094>>விஜய்யின் பிரசாரம் ரத்து<<>> செய்யப்பட்டதற்கு சென்னை கமிஷனர் அருணே காரணம் என ஆதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.நகரில் மாலை 2-6 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அதனை ரத்து செய்து மாலை 2-3 மணி வரை மட்டுமே அனுமதி தந்தார்கள் என அவர் தெரிவித்தார். ஸ்டாலினின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படும் கமிஷனர் அருண், கரூர் மாதிரியான பிரச்னையை சென்னையில் உருவாக்க முயற்சிக்கிறார் எனவும் கூறினார்.


