News March 19, 2026
வாட்ஸ்ஆப் Group admin தான் இதற்கு பொறுப்பு: ECI

பலரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் தேர்தல் பிரசாரங்களை கட்சிகள் முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், வாட்ஸ்ஆப் குழுக்களில் கட்சிகளின் செயல்பாட்டை கண்காணிக்க ECI மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்துள்ளது. தேர்தல் விதிகள் மீறப்படுவது தெரிந்தால், குழுவின் அட்மின் மீதே நடவடிக்கை பாயும் என்றும் ECI எச்சரித்துள்ளது. எனவே, Admin Only என்ற நிலைக்கு பல வாட்ஸ்ஆப் குரூப் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 11, 2026
நிலவை விற்று ₹100 கோடி சம்பாதித்த நபர்..

சாதாரண கார் விற்பனையாளராக இருந்த ஒருவர் நிலவை விற்று கோடிகள் சம்பாதித்த கதை சினிமாவை விட சுவாரஸ்யம். 1980-ல் டென்னிஸ் ஹோப் என்பவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிலவை தன்னுடையது என அறிவித்தார். பிறகு, ‘Lunar Embassy’ நிறுவனத்தை உருவாக்கி நிலவை Plot போட்டு விற்று ₹100 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். ஆனால் இது சட்டபூர்வமாக செல்லாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 11, 2026
இலவசம் வேண்டாம்! தேர்தல் களத்தில் இறங்கிய தாய், மகள்

தேர்தல் வந்துவிட்டாலே, வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி, இலவசம் என்ற பெயரில் ஓட்டுக்காக வாக்குறுதி தரும் திறனற்ற அரசியலை எதிர்ப்பதாக கூறி, தாயும் மகளும் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். CM போட்டியிடும் கொளத்தூரில் மகள் ஸ்டெபியும், ஆலந்தூரில் தாய் செங்கொடி விஜயலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.
News April 11, 2026
‘திமுகவுக்கு ஓட்டு போடுவது தற்கொலைக்கு சமம்’

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக நிறைவேற்றவில்லை என்று பி.ஆர்.பாண்டியன் சாடியுள்ளார். ரேஷனில் தேங்காய் எண்ணெயை விற்கவும், தென்னங்கள் இறக்க அனுமதிக்க கோரியும் போராடி வருகிறோம். ஆனால், விவசாயிகளுக்கு விரோதமாக திமுக அரசு செயல்படுகிறது. அக்கட்சிக்கு ஓட்டு போட்டால், அது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்; கள் இறக்க அனுமதிப்போருக்கு ஓட்டு போட வேண்டும் என தெரிவித்தார்.


