News May 15, 2024
25 மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், சேலம், நாமக்கல் உள்பட 21 மாவட்டங்களில் மிதமான மழையும். செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடியுடன் லேசான மழையும் பெய்யக் கூடும். இதனால் சாலை தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News November 6, 2025
டி20ல் வாஷிங்டன் சுந்தர் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். இந்நிலையில், சர்வதேச டி20-யில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையையும் சுந்தர் பெற்றுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கியுள்ளார். இதன்மூலம் 3 ஃபார்மட்டிலும் தடம் பதிக்கும் ஆல்ரவுண்டராக வாஷி உருவாகி வருகிறார்.
News November 6, 2025
30 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 30 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அபராத தொகையாக தலா ₹2.50 லட்சம் செலுத்தினால் உடனடியாக விடுதலை ஆகலாம் என்றும், இல்லையென்றால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
பிரபல நடிகர் காலமானார்… குவியும் இரங்கல்

புற்றுநோய் பாதிப்பால் காலமான பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய்(55) மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். KGF படத்தில் காசிம் சாச்சா பாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஹரிஷின் மறைவு பெரும் சோகம் என்றும், அவரது இழப்பு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது எனவும் கர்நாடக DCM சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP


