News March 19, 2026
ஆதவ்வால் ஆனந்த் தரப்பு அதிருப்தியா?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இடையே மோதல்போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், RK நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் சில தொகுதிகளை ஆதவ் தரப்பு கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்த ஆனந்த் தரப்பினருக்கு வருத்தம் அளித்துள்ளதாம். இதுதொடர்பாக முறையிட்ட நிர்வாகிகளிடம், தன்னையே பாஜகவுடன் பேசுவதாக விஜய் வரை புகார் கூறிவிட்டனர் என ஆனந்த புலம்புவதாக கூறப்படுகிறது.
Similar News
News April 6, 2026
மாமன்னன் மகன் நான் நிற்கிறேன்: லோகேஷ்

ராசிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக அதிமுக Ex சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், மாமன்னன் மகன் நான் நிற்கிறேன்; DCM நடித்த கேரக்டர் நான் தான் என பேசினார். அடுத்த 15 நாட்களில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவோம். இந்த முறை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் வண்ணமே மாறும் என கூறியுள்ளார். <<-se>>#TNElection2024<<>>
News April 6, 2026
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*இரும்பை யாராலும் அழிக்க முடியாது, அதன் துருவைத் தவிர. அதேபோல் ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது, அவனது சொந்த சிந்தனையைத் தவிர. *எனக்கு மிகப்பெரிய சந்தோஷமே, ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்று சொன்னால், அதை செய்து காட்டுவது தான். *இறுதியில், நாம் எடுக்காத வாய்ப்புகளைப் பற்றி மட்டுமே வருத்தப்படுவோம். *மக்கள் உங்கள் மீது வீசும் கற்களைக் கொண்டு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்குங்கள்.
News April 6, 2026
யாரை திருமணம் செய்யலாம் என்று கூட AI சொல்லும்: பிரதீப்

உறவு, உடை, மேக்கப் முதல் மருத்துவம் வரை அனைத்திற்கும் பலர் ChatGPT-யையே சார்ந்திருப்பதாக பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் LIK பட நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் சக மனிதர்களை விட தங்கள் செல்போனை அதிகம் நம்பும் ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில், ஒருவர் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை கூட AI சொல்லும். இதுவே LIK படம் உருவாக காரணம் என்றும் தெரிவித்தார்.


