News March 19, 2026

அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

image

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 8, 2026

ரேஷன் கார்டுக்கு ₹10,000.. EPS வாக்குறுதி அளித்தார்

image

இல்லத்தரசிகளுக்கு ₹8,000 கூப்பன் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியை பரப்புரை மேடைகளில் தொடர்ந்து ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார். இதற்கு எதிர்வினையாக, ரேஷன் கார்டுக்கு ₹10,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை EPS கையில் எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ₹10,000 வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதை எப்படி பார்க்குறீங்க?

News April 8, 2026

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரான் எண்ணெய்

image

சீனா சென்று கொண்டிருந்த ‘ஜயா’ என்ற ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் தற்போது இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 2019-ல் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா தற்போது நீக்கியதைத் தொடர்ந்து, சுமார் 7 ஆண்டுகள் கழித்து ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வர உள்ளது. இதுவரை UAE, குவைத், சவுதி மற்றும் பிற நாடுகளில் இருந்து மட்டுமே ஹார்முஸ் வழியாக நமக்கு எண்ணெய் வந்துகொண்டிருந்தது.

News April 8, 2026

பாஜகவின் கட்டளைகளை EC நிறைவேற்றுகிறது: ஸ்டாலின்

image

தமிழகத்தின் தலைமை செயலாளர், IPS அதிகாரிகள் மாற்றத்திற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக பாஜகவின் கட்டளைகளை EC நிறைவேற்றி வருவதாக தனது X பதிவில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது அதிகார அத்துமீறல், ஆணவத்தின் உச்சக்கட்டம் என குறிப்பிட்டுள்ள அவர், எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழகத்தில் NDA கூட்டணி மண்ணைக் கவ்வுவது உறுதி எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!