News May 15, 2024

வாசிங் மெஷினை கடை முன்பு எரிக்க முயற்சி

image

திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அண்ணா சாலையில் உள்ள பிரபல ஷோரூமில் வாசிங் மெஷினை 7 மாதத்திற்கு முன்பு வாங்கியுள்ளார். அது அடிக்கடி பழுதான நிலையில் வேறு வாசிங் மெஷினை கேட்டுள்ளார். சர்வீஸ் செய்து தருவதாக கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளம்பெண் அந்த கடை முன்பு வாசிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 28, 2025

சென்னையில் 4.66 லட்சம் பேருக்கு உணவு!

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அக். 22 முதல் இன்று (அக்.28) காலை வரை மொத்தம் 4,66,650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்க 215 நிவாரண முகாம்களும், அவர்களுக்கு உணவு தயாரிக்க 111 சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News October 28, 2025

சென்னை: சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமில்லை!

image

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் இன்று (அக்.28) தீவிரமடைந்தது. மேலும் தமிழ்நாட்டில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்று(அக்.28) காலை நிலவரப்படி 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமின்றி போக்குவரத்து சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

சென்னை: அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு அறிவுரை

image

சென்னை: பருமழை காலங்களில் தொலைதூரப் பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்தோடு இயக்க வேண்டும் எனவும் தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகளே இயக்க சொன்னாலும், மாற்று வழிகளையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், கடலோரச் சாலை பேருந்து ஓட்டுநர்கள் வானிலை அறிவுறுத்தல்களை முறையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!