News March 19, 2026
நில அபகரிப்பு வழக்கு: அதிமுக Ex அமைச்சருக்கு சம்மன்

கரூரில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் கரூர் குற்றவியல் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர், அவரது சகோதரர் உள்ளிட்ட 17 பேரும் மே 11-ல் CBCID விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருக்கத்தில் வந்த சம்மன் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 8, 2026
எடப்பாடி TVK வேட்புமனு தள்ளுபடி.. KAS கடும் அதிர்ச்சி!

எடப்பாடியில் EPS-க்கு எதிராக செங்கோட்டையன் நிறுத்திய அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், EPS-ஐ அரசியல் எதிரி, துரோகி என கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர், எடப்பாடி தொகுதியில் EPS நிச்சயம் தோல்வியடைவார் என சவால் விட்டிருந்தார். தற்போது அந்த தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
News April 8, 2026
போர் நிறுத்தம்… இந்தியாவுக்கு நிம்மதி

ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடந்தி வந்த கூட்டுத்தாக்குதல் 39 நாள்களுக்கு பிறகு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேற்காசியாவில் நிலவிய இப்போரால் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் முடங்கியது. இந்நிலையில் விரைவில் ஈரான் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், இனி சீரான எரிவாயு தடையின்றி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
News April 8, 2026
தமிழகத்தில் 6.35 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு

SIR பணிகளுக்கு முன்பு தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR திருத்தத்திற்கு பிறகு 5.43 கோடியாக குறைந்தது. இதன்பின்னர் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், ECI வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5.73 கோடி (5,73,43,291) பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2.80 கோடி ஆண் வாக்காளர்கள், 2.93 கோடி பெண் வாக்காளர்கள் & 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.


