News May 15, 2024
வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமன்னார்கோட்டை பகுதியில் அரசு நலத்திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் கீழமுடிமன்னார்கோட்டை பகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
Similar News
News January 10, 2026
ராமநாதபுரம்: ஒரே நாளில் 14 பேரை கடித்து குதறிய நாய்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரமக்குடி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் நேற்று மதியம் வெறிநாய் ஒன்று தெருவில் சுற்றி வந்துள்ளது. வீட்டு வாசலில் இருந்த பெண்கள், முதியவர்களை துரத்தி துரத்திக் கடித்தது முதியவர்கள் சிலர் தடுக்க முடியாமல் கீழே விழுந்தனர். இரு பெண்கள் உட்பட 14 பேரை நாய் கடித்தது. இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் GH-யில் அனுமதிக்கப்பட்டனர்.
News January 10, 2026
போலி நிதி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு நிறுவனங்கள், மனை வணிக நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் மேலச்சோத்துரணி, சக்கரக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94981-07562, 83000-38265 கைப்பேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி தெரிவித்தார்.
News January 9, 2026
இராம்நாடு: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

இராம்நாடு ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


