News May 15, 2024
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, செங்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அவரது உறவினரான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சைல்ட் லைனில் வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 29, 2025
தி.மலை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.29) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, தி.மலை- வி.பி.எஸ்.சி கட்டிடம், மேற்கு ஆரணி- கோபால் திருமண மண்டபம் தேவிகாபுரம், தெள்ளார்- விபிஆர்சி கட்டிடம் அருகில் மேல்பாதி, அனக்காவூர்- சிந்துஜா திருமண மண்டபம் அனக்காவூர், கலசப்பாக்கம்- திருநா கல்யாண மண்டபம் சிங்காரவாடி, ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறும்.
News October 29, 2025
திருவண்ணாமலை : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை

தி.மலை அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது இத்தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் இந்த கல்வி உதவித்தொகை அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்காது இந்தத் தேர்வு சென்னையை தவிர பிற மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடத்தப்படுகிறது.


