News May 15, 2024
2029 வரை மோடியே பிரதமராக தொடர்வார்: அமித் ஷா

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின், ஏதோ வழக்கமான தீர்ப்பு அல்ல என்றும், சிறப்பு கவனிப்பு என நாட்டில் பலரும் நம்புவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு கெட்ட செய்தி இருப்பதாக கூறிய அவர், 2029 வரையும், அதன்பின்பும் பிரதமர் மோடி தான் தங்களை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷாவே அடுத்த பிரதமராக்கப்படுவார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
Similar News
News August 9, 2025
ரூமி பொன்மொழிகள்

*நேற்று நான் ஒரு புத்திசாலி, அதனால் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் ஒரு ஞானி, அதனால் என்னை நானே மாற்றிக் கொள்கிறேன். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *உங்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி ஒன்று உள்ளே உள்ளது. அதைத் தேடுங்கள். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.
News August 9, 2025
கம்பேக் கொடுக்க தயாராகும் கோலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியில் <<17340341>>கோலி <<>>ஈடுபட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை கோச் நயீம் அமினுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வரும் அக்டோபர் 19 முதல் 25 வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நரைத்த மீசை, தாடியுடன் கோலி இருந்த புகைப்படம் வைரலானது.
News August 9, 2025
ராகுலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பியூஷ் கோயல்

எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்க ராகுல் காந்தி ஆசைப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினரின் பேச்சை கேட்டு இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்மறையாக ராகுல் விமர்சனம் செய்வதாகவும், இதற்காக நாட்டு மக்கள் என்றும் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவை உலகநாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.