News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
ராசி பலன்கள் (16.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 16, 2025
10-ம் வகுப்பு மாணவர்கள் ₹10,000 பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வர் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 31-ல் நடைபெற உள்ளது. இதன்மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கல்வியாண்டுக்கு ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 18-ம் தேதி முதல் www.dgeingov.in என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, 26-ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை HM-இடம் ஒப்படைக்க வேண்டும்.
News December 16, 2025
150 kmph வேகத்தில் சீறிய ரயில்.. புதிய உச்சம்

ரயிலின் வேகத்தில் இந்திய ரயில்வே புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தன்பாத் மண்டலத்தில் ரயிலை 150 kmph வேகத்தில் செலுத்தி, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, டம்ளரில் இருந்த நீர் சிந்தாமல், சுமூகமான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத், ராஜதானி மற்றும் சதாப்தி உள்ளிட்ட முக்கிய ரயில்களின் அதிகபட்ச வேகம் 130 kmph ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


