News May 15, 2024
CAA சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் 14 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளது உள்துறை அமைச்சகம். குடியுரிமை வேண்டி விண்ணப்பித்து, இந்தியாவில் அகதிகளாக வசித்துக் கொண்டிருக்கும் 14 பேருக்கு உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கினார். CAA சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது முதன்முறையாக CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை: EPS

திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க பல கட்சிகள் தங்களுடன் பேசி வருவதாக EPS கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இதுவரை எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அதிமுக அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், EPS எந்த கட்சிகளையும் தாங்கள் அழைக்கவில்லை என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
News August 8, 2025
நகத்தில் இப்படி இருக்கா.. கவனியுங்க!

ஒருவரின் கை நகத்தின் கலரை வைத்தே அவரின் ஹெல்த் பற்றி சொல்லிவிடலாம் தெரியுமா?
✦நகத்தின் நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்னை
✦கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயாக இருக்கலாம்
✦மஞ்சள் நிறம்: தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு
✦வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது.
✦ஆரோக்கியமான நகங்களின் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.
News August 8, 2025
பிரேசில் அதிபருடன் பேசிய PM மோடி

பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வாவும் PM மோடியும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அரசு வெளியிட்ட அறிக்கையில் இது பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்தியா – பிரேசில் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழமான பங்களிப்பை செலுத்த உறுதி பூண்டுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார்.