News March 18, 2026

அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு: நயினார்

image

<<19356260>>விளாத்திகுளத்தில் <<>> பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தை நயினார் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது X பதிவில், மாணவியின் குடும்பத்தாரின் கண்ணீர் முகம் தனது நெஞ்சில் ஆறாத வடுவாக உறுத்துகிறது. இவ்வழக்கில், இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காதது அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு; ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என கூறியுள்ளார்.

Similar News

News April 7, 2026

காங்., வேட்பாளருக்கு எதிராக காங்., நிர்வாகி போட்டி

image

ஒவ்வொரு கட்சியும் வெயில், மழை என்று பாராமல் தேர்தல் பணி செய்து வரும் நிலையில், காங்கிரஸில் உள்கட்சி பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை என கூறப்படுகிறது. நாங்குநேரி காங்., வேட்பாளரான ரூபி மனோகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் மகளிரணி ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான தனிதங்கம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

News April 7, 2026

நாய் கடிக்கு தமிழ்நாட்டில் 13 பேர் பலி.. ஷாக் ரிப்போர்ட்!

image

TN-ல் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் 13 பேர் பலியாகியுள்ளனர். பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தெருநாய்கள் கடிக்கு ஆளாகி வருகின்றனர். இது நகரங்களை விட கிராமங்களில் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்தாண்டு 6,25,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 95 நாள்களில் மட்டும் 2,09,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 7, 2026

பூனம் பாண்டேவின் ஐடியா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

image

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் பூனம் பாண்டே. இந்நிலையில், சரியோ தவறோ நம்மை பற்றி அனைவரும் பேச வேண்டும், அதற்கேற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும் என பூனம் பாண்டே கூறியுள்ளார். இப்படி செய்தால் தான் சினிமாவில் நாம் கவனிக்கப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன.

error: Content is protected !!