News May 15, 2024

தமிழகத்திற்கு கஞ்சா எப்படி வருகிறது ?

image

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஏன் முற்றிலும் தடுக்க இயலவில்லை என உயர் நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது. இன்று நடந்த கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணையின் போது, போதைப்பொருள் எப்படி தமிழகத்திற்குள் வருகிறது எனவும், தமிழக எல்லை மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளை கடந்து தான் தமிழகத்தில் கஞ்சா விற்கப்படுகிறது எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

Similar News

News September 12, 2025

மதுரை மாநகர் காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஏதேனும் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக புகார் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், காவல் அதிகாரி தொலைபேசி எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.

News September 12, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று(12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது அவசர கால எண்டான் 100ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

ரயில் பாதைகள் மின்சார பாதைகளாக மாற்றம்

image

மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் நாளை (செப் 13) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருப்பதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!