News March 18, 2026
அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

அதிமுகவில் தொகுதி பங்கீட்டுக்கு குழு அமைத்து 4 நாள்கள் ஆகியும் இதுவரை ஒரு கட்சியை கூட அழைத்து பேசவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளதாக அதிமுக, பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அப்படியே இருந்தாலும் ஏற்கெனவே உள்ள பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை அழைத்துப் பேசாதது ஏன் என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தாமதத்தால் NDA-வில் புகைச்சல் என திமுகவினர் விமர்சிக்கின்றனர்.
Similar News
News April 6, 2026
₹40,000 சம்பளம், 667 காலியிடங்கள்.. இன்றே கடைசி!

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News April 6, 2026
மேட்ச் தோற்றாலும் CSK-ன் மாஸ் ரெக்கார்டு!

பொதுவாக IPL அதிக ரன்களை விளாசும் அணிகள் எது என்று கேட்டால், பல ரசிகர்களும் SRH, RCB, MI போன்ற அணிகளை குறிப்பிடுவார்கள். ஆனால், அதிகமுறை 200+ ரன்களை விளாசியுள்ளது CSK தான். நேற்றைய RCB-க்கு எதிரான 207 ஸ்கோரையும் சேர்த்து, இதுவரை 37 முறை CSK 200+ ரன்களை விளாசி உள்ளது. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் RCB(36), 3-வது இடத்தில் PBKS(33), 4-வது இடத்தில் MI(32) ஆகிய அணிகள் உள்ளன.
News April 6, 2026
தேர்தல் புறக்கணிப்பு.. அடுத்த சர்ச்சை வெடித்தது!

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டையே உலுக்கிய விவகாரம் என்றால் வேங்கைவயல் பிரச்னைதான். இந்நிலையில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததை கண்டித்தும், பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிகளாக சித்தரிப்பதை கண்டித்தும் வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர். இந்த தேர்தல் புறக்கணிப்பு திமுகவை வீழ்த்தும் என அன்புமணி கூறியுள்ளார்.


