News May 15, 2024
நமது அணுகுண்டுகள் ஃபிரிட்ஜில் வைப்பதற்கா?: யோகி

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை பிரதமர் வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஹமிர்பூரில் பிரசாரம் செய்த அவர், மோடி ஆட்சியில் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகக் கூறினார். மேலும், பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக காங்., மிரட்டுவதாக கூறிய அவர், நம்மிடம் இருக்கும் அணுகுண்டுகள் ஃபிரிட்ஜில் வைத்திருப்பதற்காகவா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News December 7, 2025
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் சென்னையில் காலமானார்

இலங்கையின் Ex அமைச்சர் செல்லையா ராஜதுரை(98) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 – 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் MP-யாக இருந்துள்ளார். 1979-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய இவர் MGR, சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். #RIP
News December 7, 2025
SIR படிவம் கொடுத்தவர்களின் கவனத்திற்கு..

SIR படிவம் கொடுத்தாச்சு, நம்ம வேலை முடிஞ்சுது என அசால்ட்டாக இருக்க வேண்டாம். உங்க படிவத்தை SIR அலுவலர், ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறாரா என்பதை செக் பண்ணுங்க. அதற்கு, <
News December 7, 2025
₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: CM

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை உருவாக்கியிருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய அவர், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை என்று தெரிவித்த CM, நாட்டிலேயே பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறினார்.


