News May 15, 2024

இனியும் அரசு உறங்கக் கூடாது

image

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 18, 2025

செப்டம்பர் 18: வரலாற்றில் இன்று

image

*உலக நீர் கண்காணிப்பு நாள். *1924 – மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 1945 – ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் உயிரிழந்தநாள். *1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய யூனியன் தனது ராணுவ நடவடிக்கையை கைவிட்டது. *2016 – ஜம்மு காஷ்மீரில் யூரி பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

News September 18, 2025

GST 2.0: வாகன உதிரிபாகங்கள் விலையும் குறைகிறது

image

GST 2.0 எதிரொலியாக வாகனங்கள், டிவிக்கள் விலை குறைந்த நிலையில், தற்போது வாகன உதிரிபாகங்களின் விலையும் குறைந்துள்ளது. ஆமாம், அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் வாகனங்களின் டயர்கள் ₹300 முதல் ₹1,500, டிரக், லாரி, பஸ்களின் டயர்கள் ₹2,000 வரையிலும் குறைகின்றன. இதனால், வணிக வாகன உரிமையாளர்கள், விவசாயிகள், பைக் ஓட்டிகள் பயனடைவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

News September 18, 2025

ரணகளமாகும் களம்: சூப்பர் 4 சுற்றில் மீண்டும் IND vs PAK !

image

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய UAE உடனான போட்டியில் வென்றதன் மூலம், பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், வரும் 21-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ள ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழிதீர்க்குமா அல்லது இந்திய அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!