News May 15, 2024
இனியும் அரசு உறங்கக் கூடாது

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 6, 2025
கடைசி நேரத்தில் கட்சி மாறினார் MLA

பிஹாரில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் <<18211386>>வேட்பாளர்<<>>, MLA கட்சி தாவினர். பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சி சார்பில் முங்கெர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சய் சிங்க் பாஜகவில் இணைந்தார். இந்த இணைப்பு நடந்த கொஞ்ச நேரத்திலேயே, பிர்பெயின்தி தொகுதியின் பாஜக MLA-வான லலன் குமார் அக்கட்சியில் இருந்து விலகி தேஜஸ்வி முன்னிலையில், RJD-யில் இணைந்துள்ளார்.
News November 6, 2025
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலின் முருகனை பற்றி பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 6, 2025
பிஹார் தேர்தல்.. சற்றுநேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்

பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. NDA கூட்டணியில் JDU 57, BJP 48, LJP 14, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. MGB கூட்டணியில் RJD 73, காங்கிரஸ் 24, CPI(ML) 14 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், சுமார் 3.75 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.


