News May 15, 2024
தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசுமை விருது சாம்பியன் வழங்குவது குறித்த கருத்துக்களை ஆட்சியர் வழங்கினார்.
Similar News
News November 6, 2025
ராணிப்பேட்டை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

ராணிப்பேட்டை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
ராணிப்பேட்டை: அபாயகரமான வேகத்தடைக்கு தீர்வு!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து வேக தடைகளின் மீது வெள்ளை பெயிண்ட் இல்லாததால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இதனால் இன்று (நவ.06) அப்பகுதியில் நெடுஞ்சாலை பணியாளர்கள் வேகத்தடைக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 6, 2025
ராணிப்பேட்டை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


