News May 15, 2024
பேருந்து நிலையத்தில் பொழுதுபோக்கு அரங்குகள்

புதிதாக அமைக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான புதிய வரைபடம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வணிக வளாகத்திற்கு பொதுமக்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News December 16, 2025
அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தினால் கடும் தண்டனை

அனுமதியின்றி ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 15, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (15.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
மதுரையில் இதுபோன்ற பல தூண்களை காணலாம் – அறநிலையத்துறை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில், மதுரையின் பல மலைகள், சமணர் மலை, மேலூர் என பல இடங்களில் தூண் உள்ளது என அறநிலையதுறை கூறியுள்ளது. நாகமலை, பசுமலை, அழகர்மலை, சித்தர்மலையிலும் இதுபோன்ற தூண்களை காணலாம். மதுரையை சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் தூண்களின் படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்ததுள்ளது. வரலாற்று ஆய்வாளர் சீனிவாசன் எழுதிய சமண தூண்கள் குறித்த புத்தகமும் சமர்ப்பிக்பட்டுள்ளது.


