News March 17, 2026
திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி

திமுக – சிபிஎம் இடையில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து பேசிய பெ.சண்முகம், கடந்த தேர்தலை ( 6 தொகுதிகள்) விட, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார். மேலும், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.
Similar News
News April 3, 2026
‘காதலர் தினம்’ நடிகை மீது கேஸ் போட்ட விவசாயி

‘காதலர் தினம்’ சோனாலி பிந்த்ரே & அவரது கணவர் மீது விவசாயி ஒருவர் நில அபகரிப்பு வழக்கு தொடுத்துள்ளார். புனேவின் மாவலில் உள்ள தனக்கு சொந்தமான 75 சென்ட் பூர்விக நிலத்தை நடிகையும் அவரது கணவரும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததுடன் மிரட்டுவதாகவும் சந்திரகாந்த் ஷிண்டே என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சோனாலி பிந்த்ரே, பணம் பறிக்க பொய் வழக்கு போட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
News April 3, 2026
₹40,000 சம்பளம், 667 காலியிடங்கள்.. APPLY NOW

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News April 3, 2026
வாஜ்பாய்க்கு முரட்டு அடிமை கருணாநிதி: EPS

கருணாநிதி யாருக்கு முரட்டு பக்தராக இருந்தார் என மக்களுக்கு தெரியும் என்று EPS விமர்சித்துள்ளார். மோடியின் முரட்டு பக்தர் EPS என <<19537003>>உதயநிதி<<>> பேசியதற்கு பதிலடி கொடுத்த அவர், இதை கண்டுபிடித்ததற்காக உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் எனவும் கிண்டலடித்தார். மேலும், கருணாநிதி அப்போதைய PM வாஜ்பாய்க்கு முரட்டு பக்தனாக இருந்ததாகவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


