News May 15, 2024
மயிலாடுதுறை பிரதான சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீர்

மயிலாடுதுறை நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
மயிலாடுதுறை: பிரதமர் மோடி வருகை – நிர்வாகிகள் ஆலோசனை

மயிலாடுதுறையில் உள்ள தனியார் மஹாலில் நேற்று பாஜக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தனர்.
News March 11, 2026
மயிலாடுதுறைக்கு புதிய ரயில் சேவை தொடக்கம்!

மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு புதிய பேசஞ்சர் ரயில் சேவை தொடக்க விழா இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு காரைக்குடிக்கும், அங்கிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 10:30க்கு மயிலாடுதுறைக்கு வந்தடையும்
News March 11, 2026
மயிலாடுதுறை: தலையில் கல்லை போட்டு கொடூர கொலை

சீர்காழி, தென்பாதி அருகே கம்பி பிட்டரான நாகராஜ்(45) என்பவரும், அவரது நண்பரான நீலகண்டன்(25) என்பவரும் நேற்று மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜ் தலையில் நீலகண்டன் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ள்ளார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் உடலை கைப்பற்றி. நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


