News May 15, 2024
காட்டுயானை தாக்கி 15 நாட்களில் 3 பேர் பலியான சோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் அலசட்டி கிராமத்தில் நேற்று ஊருக்கு அருகிலேயே உள்ள விளைநிலத்திற்கு சென்று நேற்றிரவு வீடு திரும்பிய திம்மராயப்பா (42) என்பவரை ஒற்றைக் காட்டுயானை தூக்கி வீசியது. படுகாயமடைந்த திம்மராயப்பா தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்டுயானை தாக்கி கடந்த 15 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News March 11, 2026
கிருஷ்ணகிரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
கிருஷ்ணகிரிக்கு வருகிறார் துணை முதல்வர்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் (வெள்ளி) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பையூர் மற்றும் பர்கூரில் கட்சி கொடியேற்றி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News March 11, 2026
கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் சிக்கிய 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி, லாலிக்கல் தொழிற்சாலையில் காவலாளிகளைத் தாக்கி, துப்பாக்கி மற்றும் காப்பர் ஒயர்களைக் கொள்ளையடித்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல், மாணிக்கம், முனிராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொம்மாண்டப்பள்ளி அருகே வாகனத் தணிக்கையில் பிடிபட்ட அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கார் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


