News March 17, 2026
டெல்லியில் CBI-யிடம் ஆஜராகும் செந்தில்பாலாஜி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி தான் காரணம் என தவெக தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இதுதொடர்பாக விளக்கமளிக்க அவருக்கு CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், டெல்லி CBI அலுவலகத்தில் இன்று செந்தில்பாலாஜி ஆஜராகிறார். இதற்காக நேற்று இரவே அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். 2 நாள்களுக்கு முன்புதான் விஜய் ஆஜராகியிருந்தார்.
Similar News
News April 7, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,040 குறைந்தது

தங்கம் விலை நேற்று மாலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹1,440 உயர்ந்த நிலையில், இன்று அந்த விலையில் தலைகீழாக சரிந்து காலை நேர வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹130 குறைந்து ₹13,860-க்கும், சவரன் ₹1,040 குறைந்து ₹1,10,880-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடிவருவதால் நகை வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News April 7, 2026
தாமரை மலரட்டும் அவிநாசி வளரட்டும்: எல்.முருகன்

அதிமுக வசம் இருந்த அவிநாசி தொகுதியில் இம்முறையில் பாஜக சார்பில் எல்.முருகன் களமிறங்கியுள்ளார். அந்த தொகுதியின் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் வாழ்த்து பெற்றுவிட்டு, எல்.முருகன் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். குப்பேபாளையம் மற்றும் காட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்த அவர், அவிநாசிக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு கேட்டார்.
News April 7, 2026
ஏர் இந்தியா CEO ராஜினாமா

ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியை, கேம்பல் வில்சன் ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027-ல் முடிவடையவுள்ளது. ஆனால், அதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், புதிய CEO பொறுப்பேற்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். கடந்தாண்டு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்ததும், அதனால் 2025 நிதியாண்டில் இந்நிறுவனம் ₹20,000 கோடியை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.


