News May 15, 2024
12 மணி நேர போராட்டத்திற்கு பின் 14 பேரும் மீட்பு

ராஜஸ்தானில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கத்தில் நேற்றிரவு லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் சிக்கினர். தொடர்ந்து மீட்புப் பணியில் போலீசாரும், பேரிடர் மீட்பு படையினரும் 12 மணி நேரத்திற்கும் மேல் போராடியதில், 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
Similar News
News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. ₹500 கட்டுகளுக்கு RBI கட்டுப்பாடு

5 மாநில தேர்தல் காரணமாக, பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளை தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
News March 15, 2026
தமிழக தேர்தல்.. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இனி பொதுமக்கள் வெளியே செல்லும்போது ₹50,000 வரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பறக்கும்படையினர் சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்படும். SHARE IT
News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் புதிய மாற்றம்

தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைத்து EPS அறிவிப்பு வெளியிட்டுள்ளார். EPS தலைமையிலான ஆட்சி மன்றக் குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி, வேணுகோபால் Ex MP, ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை MP ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதிமுகவினர் செயல்பட வேண்டும் என EPS கேட்டுக்கொண்டுள்ளார்.


