News May 15, 2024

குடிநீர் கிணற்றில் மலம் கலந்ததாக புகார்

image

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. திறந்தவெளி கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் 100 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு சுவரில் அமர்ந்து சிலர் கிணற்றில் மலம் கழித்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்திற்கே முடிவு கிடைக்காத நிலையில், அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

Similar News

News March 7, 2026

இந்திய ரசிகர்களின் இதயத்தை நொறுக்குவாரா சான்ட்னர்?

image

கடந்த 2023 ODI WC பைனலில் இந்தியாவை தோற்கடித்து அகமதாபாத் ஸ்டேடியத்தையே ஒட்டுமொத்தமாக அமைதியாக்கினார் பேட் கம்மின்ஸ். போட்டிக்கு முன்பே இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாங்கள் ஃபேவரைட் இல்லை என்றாலும், சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வோம்; அது சிலருடைய இதயத்தை நொறுக்கலாம் என சான்ட்னர் கூறியுள்ளார். கம்மின்ஸ் போல இவரும் சொன்னதை செய்வாரா?

News March 7, 2026

மோசமான ஹேர் கட்.. ₹25 லட்சம் இழப்பீடு

image

2018-ல் டெல்லி ITC Maurya ஹோட்டலில் உள்ள சலூனில் மோசமாக முடி வெட்டியதற்காக மாடல் ஒருவர் ₹25 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார். அவர், ஸ்டைலிஸ்ட் செய்த ஹேர் கட்டால் மாடலிங் வாய்ப்புகளை இழந்ததாக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதற்கு நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு ₹2 கோடி இழப்பீடு அறிவித்தது. ஆனால் ITC இதை எதிர்த்து SC-ஐ அணுகியது. இதையடுத்து இழப்பீடு தொகை ₹25 லட்சமாக திருத்தம் செய்யப்பட்டது.

News March 7, 2026

விலை மொத்தமாக சரிந்தது.. கிலோ ₹5 மட்டுமே

image

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், தொடர் சரிவில் இருந்த தக்காளி இன்று 1 கிலோ வெறும் ₹5-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம்(₹25), உருளைக் கிழங்கு(₹20), சுரைக்காய்(₹20) உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இதேபோல், கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் விலை சரிந்துள்ளது. உங்க ஊரில் விலை எப்படி உள்ளது?

error: Content is protected !!