News May 15, 2024

தென்காசி: மாற்றுப்பாதை பயன்படுத்த அறிவுறுத்தல்

image

தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை இலிருந்து இலஞ்சி செல்லும் சாலையில் மேம்பாலம் வேலை நடைபெற்று வருவதால் இருசக்கர வாகனம் செல்வதற்கு பாதை இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் நேற்று முதல் அந்த பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்று வழிப் பாதையை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Similar News

News January 21, 2026

தென்காசியில் கடைகளில் திடீர் சோதனை

image

தென்காசி நகராட்சி 29 வது வார்டு சுவாமி சன்னதி பஜார், மற்றும் 30வது வார்டு கீழ ரத வீதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் உத்தரவு படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கடைகளில் நடத்திய சோதனையில் நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News January 20, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (20-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News January 20, 2026

தென்காசி: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 24.11.2025 ஆம் தேதி தொடர் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் விதமாக வரும் 24ம் தேதி சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாட்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!