News May 15, 2024
தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்

கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன. இந்நிலையில், இந்த இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News March 18, 2026
பள்ளி விழாக்களில் விஜய் பாடல்களுக்கு தடை!

TN முழுவதும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் விஜய்யின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் பலரும் விஜய் கட்சியின் பெயர், சின்னத்தை கூறும் காட்சிகள் SM-ல் வைரலாகி வருகின்றன. தேர்தல் நேரம் என்பதால், விஜய் பாடல்களை தவிர்க்க வேண்டும் என HM-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News March 18, 2026
Cab ரைட்டில் புது Scam: ₹285-க்கு ₹5,950 பில்!

₹285 பில்லுக்கு உங்ககிட்ட ₹5,950 கேட்டா எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவம் பெங்களூருவில் ஓலாவில் பயணித்தவருக்கு ஏற்பட்டுள்ளது. ‘ஏன் இவ்வளவு?’ எனக் கேட்டதற்கு, நீங்க கேன்சல் பண்ண ரைடுக்கெல்லாம் சேர்த்து இவ்வளவு வருது, பணத்தை வை என டிரைவர் மிரட்டியுள்ளார். கஸ்டமர் கேரும் கைகொடுக்காத நிலையில், போலீஸ் ஸ்டேஷன் போகலாம் எனக் கூப்பிட, டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டார். உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டா?
News March 18, 2026
5 தொகுதிகளுக்கு இசைவு தெரிவித்தது ஏன்?

பாஜகவை வீழ்த்தி இந்தியாவுக்கு நல்லதொரு அரசியலை மக்களுக்கு எடுத்துரைக்கவே திமுக கூட்டணியில் தொகுதியை சமரசம் செய்து கொண்டதாக வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைமை தங்களை மிரட்டி பணிய வைக்கவில்லை; 6-ல் இருந்து 5-ஆக குறைத்துக்கொள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததால், தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளோம் என்றார்.


