News May 15, 2024
திருச்சி: திடீரென ஏற்பட்ட தீ விபத்து

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளை கொண்டு சமையல் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
Similar News
News July 6, 2025
திருச்சி மாவட்டத்தில் சூப்பர் திட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நகர்புற மற்றும் கிராம புற மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் வரும் 15.07.2025 அன்று துவங்கி 14.08.2024 வரை நடைபெற உள்ளது. இது திருச்சி மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில் 8 முகாம்களும், நகராட்சிகளில் 19 முகாம்களும், பேரூராட்சிகளில் 14 முகாம்களும், வட்டார ஊராட்சிகளில் 59 முகாம்களும் மற்றும் புறநகர் ஊராட்சிகளில் 20 முகாம்களும் நடைபெற உள்ளது.
News July 6, 2025
திருச்சியில் போலீஸ் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திருச்சி, கிராப்பட்டி சிறப்பு காவல் படை முதலாம் அணியில், அரசு விதிப்படி கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 11-ம் தேதியன்று ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்கள் வரும் 9-ம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 11-ம் தேதி ரூ.2000 முன் வைப்பு தொகையாக செலுத்தி, ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என சிறப்பு காவல் படை முதலணி கமாண்டர் தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
திருச்சி: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சில உரக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மானிய உரங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ததில், 4 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.