News May 15, 2024
மீண்டும் சென்னையில் நாய்க்கடி சம்பவம்

சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உமாவின் புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் லாவன்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை நாய் கடித்த அதிர்ச்சி தீர்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு என்ன தீர்வு!
Similar News
News August 15, 2025
சாதனை தாய் மறைந்தார்

அமேசான் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான ஜெப் பெசோஸின் தாய் ஜாக்கி பெசோஸ்(78) காலமானார். முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, கடைசியாக தான் ஆரம்பித்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் ஜெப் மூட முடிவெடுத்தபோது, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் மகனுக்கு கொடுத்தனர் ஜாக்கி தம்பதி. இன்று உலகை ஆளும் நிறுவனமாக அமேசான் வளர்ந்து நிற்க அதுவே மூலதனமானது.
News August 15, 2025
இசை புயலின் 33 ஆண்டுகாலப் பயணம்

சினிமாவில் 33 ஆண்டுகால பயணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் நிறைவு செய்துள்ளார். 1992 ஆக., 15-ம் தேதி ‘ரோஜா’ படம் மூலம் சினிமாவில் அவர் அறிமுகமானார். இளையராஜா எனும் ஜாம்பவான் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், தனது தனித்துவமான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆஸ்கர் விருதில் தொடங்கி விருதுகள் வரை வென்றவர். பல மொழிகளில் இசையமைத்தாலும் தன்னை தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர். பயணம் தொடரட்டும் இசை நாயகனே.
News August 15, 2025
இந்தியாவை வாழ்த்திய அமெரிக்கா, ரஷ்யா

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவியல், பொருளாதாரம் என பல துறைகளில் சாதித்து உலகளவில் மதிப்புமிக்க நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு மேலும் மேம்பட விரும்புவதாகவும் அவர் வாழ்த்தியுள்ளார். அதேபோல், உலகின் மிகப்பெரிய பெரிய ஜனநாயக நாட்டுடனான தங்களது உறவு மதிப்புமிக்கது என அமெரிக்காவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.