News May 15, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை

image

கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பதிவானது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் 3.3 செ.மீ., மழையும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 2.7 செ.மீ., மழையும், கோவையில் 2.3 செ.மீ., மழையும் பதிவானது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 2 செ.மீ., மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.

Similar News

News March 22, 2026

ஆட்சியில் பங்கு கேட்கும் புதுவை அதிமுக

image

புதுவை NDA கூட்டணியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பளம் & உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ரங்கசாமி மீண்டும் CM ஆவதற்கு அதிமுக துணை நிற்கும் என்ற அவர், நிச்சயமாக ஆட்சியில் பங்கு கேட்போம்; தர்மத்திற்கா நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம் என்றும் கேள்வி எழுப்பினார்.

News March 22, 2026

வாழை விலை தலைகீழாக சரிவு.. விவசாயிகள் கவலை!

image

TN-ல் வாழைப்பழம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிலோ ₹55 ஆக இருந்த ஏலக்கி ₹30, பூவன் ₹25லிருந்து ₹11 என சரிந்துள்ளது. அதேபோல், 1 கிலோ கற்பூரவாழை ₹13, செவ்வாழை ₹30, நேந்திரன் ₹12-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பு, ஏற்றுமதி சரிவே இதற்கு காரணம் எனக் கூறும் வியாபாரிகள் நாளொன்றுக்கு சுமார் ₹12 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

News March 22, 2026

1 லட்சம் டன் கச்சா எண்ணெய்.. சென்னை வந்த ரஷ்ய கப்பல்

image

ரஷ்யாவில் இருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் எற்றி வந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் வரும் 24-ம் தேதி வரும் என்றும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 கப்பல்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழி நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

error: Content is protected !!