News May 15, 2024

குழந்தைகளுக்கு அறிவாற்றல் அருளும் சுவாமி மலை

image

முருகனின் நான்காம் படைவீடு என்பது சுவாமி மலை ஆகும். இது முருகனின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்க, பிள்ளையை குருவாக ஏற்று சிவபெருமான் சீடனாக அமர்ந்த இடம். அதனால், முருகன் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார். இவரைச் சென்று வணங்கினால், அறிவாற்றல் பெருகும் என்பது ஐதிகம். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் பெற்றோர், அவர்களை அழைத்துச் சென்று வணங்குவது சிறப்பு தரும்.

Similar News

News March 22, 2026

சிக்கிமில் லேசான நிலநடுக்கம்

image

சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.46 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் ஏற்கெனவே பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2026

நிலக்கரி உற்பத்தியில் இந்தியா சாதனை

image

இந்தியா தொடர்ந்து 2-வது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது. எரிசக்தி துறையில் நாடு சுயசார்பு அடைந்து வருவதற்கு இது முக்கிய சான்றாக அமைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு போதுமான அளவு பராமரிக்கப்படுவதால், அதிகரித்து வரும் நாட்டின் மின் தேவையை திறம்பட எதிர்கொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News March 22, 2026

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பொன்மொழிகள்

image

*வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம். *லட்சங்களை சம்பாதிப்பது என் லட்சியம் அல்ல; லட்சியவாதிகளை உருவாக்குவதே என் லட்சியம். *அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்; ஒழுக்கத்தை நம்பியிருங்கள். *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது.

error: Content is protected !!