News May 15, 2024
தொண்டரணி நிர்வாகியை பாராட்டிய முன்னாள் அமைச்சர்

நெல்லை மாவட்டத்திற்கு நேற்று (மே 14) பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா வருகை தந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் வைத்து கட்சியினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானியின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் உடனிருந்தார்.
Similar News
News March 12, 2026
நெல்லையில் அதிரடி கைது

நெல்லை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(28) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விலக்கு அமலாக்க பிரிவு குற்ற எண் 42/2026 ன் படி வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
News March 12, 2026
நெல்லையில் வாலிபர் மர்ம மரணம்

மானூர் அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த லின்சன் மைக்கேல் தனது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த மைக்கேல் வேலைக்கு செல்லாமல் உக்கிரன்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் அங்குள்ள கருமேனியன் குளத்தில் அவருடைய உடல் மிதந்துள்ளது. மானூர் போலீசார் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 12, 2026
நெல்லை – மங்களூர் ரயில் சேவை தொடக்கம்

நெல்லை – மங்களூர் இடையே புதன்கிழமை தோறும் நெல்லையிலிருந்து வாராந்திர ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மதியம் 3. 45 மணிக்கு இந்த ரயில் புறப்படும். கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கொல்லங்கோடு, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு வடகரை தலசேரி, காஞ்சங்காடு, காசர்கோடு வழியாக மங்களூர் செல்லும்.


