News May 15, 2024
விபத்துகளை தடுப்பது எப்படி?

நேற்றிரவு நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இரவு நேரங்களில் தூக்கம் வந்தால் அதற்கான இடத்தில் நிறுத்தி தூங்கிவிட்டு செல்லலாம், நெடுஞ்சாலை விதிகளில் உள்ள வேகக் கட்டுப்பாட்டை பின்பற்றலாம், வாகனத்துக்கு முன்னும் பின்னும் செல்லும் வாகனங்களுடன் போதுமான இடைவெளியை பின்பற்றலாம்., இவற்றை செய்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம்.
Similar News
News November 27, 2025
விஜய் கட்சியில் இணைந்த முக்கிய புள்ளிகள் PHOTOS

இன்று <<18401023>>விஜய் முன்னிலையில்<<>> செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் தவெகவில் இணைந்துள்ளனர். தவெகவில் இணைந்த அதிமுக EX MP சத்தியபாமா, புதுச்சேரி EX-MLA சாமிநாதன், அசனா ஆகியோருக்கு சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.
News November 27, 2025
இந்தியாவின் முதல் 7 சீட்டர் SUV EV: சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் 7 சீட்களை கொண்ட முதல் SUV EV காரை (XEV 9S) மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேரியண்ட்களுக்கு ஏற்றவாறு 3 வகையான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் தொடக்கவிலை ₹19.95 லட்சமாகும் (ex-showroom). பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக பேட்டரி திறன் கொண்ட வேரியண்ட் 0 -100 kph வேகத்தை 7 விநாடிகளில் அடையும். 20 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் வசதியும் உள்ளது.
News November 27, 2025
புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

புயல் எதிரொலியாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(நவ.28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள <<18406009>>CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.<<>> அதி கனமழையால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.


